Monday, August 30, 2010

தீவிரவாதம்

காவித் தீவிரவாதம்" என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனபா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முதலமைச்சருமான நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைக் கூறிய அவர், அரசு நிர்வாகம் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், பிரதமர் பதவிக்குரிய மரியாதையும் குறைந்து, மன்மோகன் செயலற்றுப் போய் உள்ளதாக குற்றம் சாற்றினார்.

"காவித் தீவிரவாதம்" என்ற வார்த்தையைக் கூறிய சிதம்பரத்தைக் கண்டித்த மோடி, சர்தார் வல்லாபாய் படேல் போன்ற இரும்பு மனிதர்கள் அலங்கரித்த உள்துறை அமைச்சகத்தின் மதிப்பை குறைக்கும் வகையில் சிதம்பரம் போன்றவர்கள் நடந்துகொள்வது துரதிருஷ்டவசமானது என்றார்.

கோவில்களில் காவிக் கொடி இல்லையா? என்று கேள்வி எழுப்பிய மோடி, கோவிலை தீவிரவாதத்தின் மையம் என்று கூறமுடியுமா எனக் கேட்டார்.

"சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சங்கராச்சார்யா, ஸ்வாமி ராமதாஸ் போன்றவர்கள், காவித் துணி அணிந்துதான் இந்த நாட்டுக்காக தியாகம் புரிந்தார்கள். அவர்களையும் நீங்கள் தீவிரவாதிகள் என்று அழைப்பீர்களா?

காங்கிரஸார் ஒவ்வொருவரும் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என்று மோடி மேலும் கூறினார்.

இது நாள் வரையிலும் முஸ்லீம் தீவிரவாதம் என்று மீடியாவில் சொல்லும் போது அதை பற்றி கவலைபடாமல் சமீபதில் நடக்கும் சம்பவங்களுக்கு காரணமானவர்களை பற்றி உள் துறை அமைச்சர் பேசிய உன்மை பேச்சை எதிர்த்துமன்னிப்பு கேட்க்க சொல்லி பாராளுமன்ரத்தில் கூச்சல், என்ன ஒரு மத சார்பின்மை!இது வரை தீவிரவாதத்திற்கு மத சாயம் பூசியவர்கள் இப்போது காவி என்றுசொன்னவுடன் நிறம் மில்லை என்று கூச்சல்.

No comments:

Post a Comment